ETV Bharat / state

'வந்தால் நகையோடு வா...' - வரதட்சணைக் கொடுமையால் பெண் பொறியாளர் எடுத்த முடிவு!

author img

By

Published : Oct 7, 2019, 3:08 PM IST

கடலூர்: திருமணமான பத்தே மாதங்களில் விவாகரத்துக் கேட்டு கணவன் நோட்டீஸ் அனுப்பியதால் பெண் பொறியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பொறியாளர் தற்கொலை

கடலூர் முதுநகர் சங்கர நாயுடு தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகள் சபீனா(21). பொறியாளரான இவருக்கும், சிதம்பரம் அருகேயுள்ள பெரிய குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, பாவாடைசாமி என்பவரின் மகன் பாவேந்தன் என்பவருக்கும், 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 36 பவுன் நகைகளையும், கட்டில், அலமாரி, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களையும் வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். மேலும், திருமணத்துக்குப் பிறகு தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகத் தெரிகிறது.

திருமணம் முடிந்த ஒருவாரத்துக்குப் பின்னர், பெண் வீட்டார் தர வேண்டிய சீர்வரிசைப் பொருட்களைக் கேட்டு, சபீனாவை அவரது கணவர் துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சீர்வரிசைப் பொருட்களை வாங்கித்தராததால், அதற்குப் பதிலாக இரண்டு லட்சம் ரூபாயை வாங்கி வரும்படிக் கேட்டு பாவேந்தனும், அவரது பெற்றோரும் சபீனாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சபீனா, கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, கடலூர் முதுநகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்றார். அங்கு கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லி கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கையில் சபீனாவின் பெற்றோர் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சபீனாவுடன் குடும்பம் நடத்த விரும்பாத பாவேந்தன், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சபீனா விஷமருந்தியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

வரதட்சணை கொடுமையால் பெண் பொறியாளர் தற்கொலை

அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சபீனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பாவேந்தன், அவரது தந்தை பாவாடை சாமி, தாயார் அஞ்சா ஆகியோர் மீது கடலூர் முதுநகர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

Intro:வரதட்சனை கேட்டு கனவர் ,மாமியார் கொடுமை வீட்டை விட்டு துரத்திவிட்டு - திருமணமான 10 மாதத்தில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் பெண் என்ஜினீயர், விஷம் குடித்து தற்கொலைBody:கடலூர்
அக்டோபர் 7,

கடலூர் முதுநகர் சங்கர நாயுடு தெருவை சேர்ந்தவர் சரவணன் இவருடைய மகள் சபினா(வயது 21). என்ஜினீயர். இவருக்கும், சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாவாடைசாமி என்பவரின் மகன் பாவேந்தன் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 36 பவுன் நகைகள் மற்றும் பாத்திரம், கட்டில், பீரோ மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்தனர். மேலும் திருமணத்துக்கு பிறகு டி.வி., குளிர்சாதன பெட்டி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை வாங்கி தருவதாக கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த ஒருவாரத்துக்கு பின்னர், தர வேண்டிய சீர்வரிசை பொருட்களை கேட்டு சபினாவை அவரது கணவர் துன்புறுத்தி வந்தார். ஆனால் சீர்வரிசை பொருட்களை வாங்கித்தராததால் அதற்கு பதிலாக 2 லட்சம் ரூபாயை வாங்கி வரும்படி சபினாவை பாவேந்தனும், அவரது பெற்றோரும் கேட்டு கொடுமைப்படுத்தினர்.

இதனால் மனமுடைந்த சபினா, கணவர் வீட்டில் இருந்து வெளியேறி கடலூர் முதுநகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கையில் சபினாவின் பெற்றோர் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சபினாவுடன் குடும்பம் நடத்த விரும்பாத பாவேந்தன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சபினா விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சபினா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பாவேந்தன், இவரது தந்தை பாவாடைசாமி, தாயார் அஞ்சா ஆகியோர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இறந்த சபீனாக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் கடலூர் சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பேட்டி - வனிதா - பெரியம்மா பெண் வீட்டார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.