வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள் - இழப்பீடு வழங்க கோரிக்கை
Updated on: Nov 12, 2022, 2:18 PM IST

வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள் - இழப்பீடு வழங்க கோரிக்கை
Updated on: Nov 12, 2022, 2:18 PM IST
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஒணங்குப்பம் கல்குளம்,டிவி நல்லூர், பூதம் பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட விளை நிலங்களில் நெற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று(நவ-11) பெய்த அதிகனமழையின் காரணமாக நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மழை நீர் மற்றும் குறிஞ்சிப்பாடி சுற்று வட்டாரங்களில் பெய்த மழை நீர் கிராமங்களில் உள்ள நெல் வயல்களில் சூழ்ந்தது தீவு போல் காணப்படுகிறது.
நெற்பயிர்கள் இடுப்பு அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏக்கருக்கு ரூபாய் 30,000 முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் கடந்த முறையே முறையாக காப்பீடு வழங்காத நிலையில் வரும் நாட்களில் உரிய இழப்பீடு தொகையாவது தங்களுக்கு கிடைத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு வழங்கினால் மட்டுமே மீண்டும் விவசாயத்தை தொடர முடியும் என தெரிவித்தனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:மழைநீரில் மூழ்கிய வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதை ... போக்குவரத்து துண்டிப்பு
