ETV Bharat / state

உயர் மின்னழுத்த கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்!

author img

By

Published : Oct 9, 2019, 12:09 PM IST

farmer Panneerselvam dead

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உயர் மின் அழுத்தம் கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி அடுத்த வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் மகன் பன்னீர்செல்வம் (55). விவசாயியான இவர், தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். வயலில் களை செடிகள் அதிகளவில் முளைத்திருந்தன. இதனால் நெல் பயிர் வளர்ச்சியின்றி இருந்தது. இந்நிலையில் விவசாயி தனது விவசாய நிலத்தில் களைக்கொல்லி மருந்து அடிப்பதற்காக இன்று வயலுக்குச் சென்றார்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி

வயலில் மருந்து அடித்துக் கொண்டிருந்தபோது மேலே தாழ்வாகச் சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தாக்கி உயிரிழந்த பன்னீர்செல்வத்திற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பன்னீர்செல்வம் வயலில் கடந்த ஆறு மாத காலமாக மின்கம்பி தாழ்வாக சென்றது தொடர்பாக மின்வாரிய அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அலுவலர்களின் அலட்சியத்தினால்தான் விவசாயி பன்னீர்செல்வம் உயிரிழந்துள்ளார். இதேபோன்று மேலும் தொடராமல் மின் கம்பியை முறையாக சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Intro:உயர் மின்னழுத்த கம்பி மூலம் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Body:கடலூர்
அக்டோபர் 9,

குமராட்சி அருகே வெள்ளூர் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயி தனது வயலில் மருந்து அடிக்கும் போது தாழ்வாக சென்ற மின் உயர் அழுத்தம் கம்பி பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி அடுத்த வெள்ளூர் கிராமத்த சேர்ந்தவர் வரதன் மகன் பன்னீர்செல்வம்(55). விவசாயி. இவர் அவரது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். வயலில் களை செடிகள் அதிக அளவில் முளைத்திருந்தன. இதனல் நெல் பயிர் வளர்ச்சியின்றி இருந்தது.
இந்த நிலையில் விவசாயி தனது விவசாய நிலத்தில் களைக்கொல்லி மருந்து அடிப்பதற்காக இன்று வயலுக்கு சென்றார் அங்கு மருந்து அடித்துக் கொண்டிருக்கும் போது மேலே தாழ்வாக சென்ற மின் உயர் அழுத்த கம்பியின்வழியே சென்ற மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த சம்பவம் அந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது பன்னீர்செல்வத்துக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பன்னீர்செல்வம் வயலில் 6 மாத காலமாக மின்கம்பி தாழ்வாக சென்றுள்ளது இவர் தொடந்து புகார் அளித்து வந்துள்ளார். மேலும் இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் குமராட்சி பகுதியில் அனைத்து விவசாய நிலங்களிலும் இதுபோன்ற உயர் மின்னழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது இது சம்பந்தமாக குமராட்சி யிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் மனு கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தினால் இன்று பன்னீர்செல்வம் என்ற விவசாயி பலியாகியுள்ளார் அதிகாரிகள் முன்கூட்டியே தாழ்வாக சென்ற கம்பிகளை சரி செய்து இருந்தால் இன்று ஒரு உயிர் பலி நடந்திருக்காது எனவே இனியும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தாமல் தாழ்வாக செல்லும் மின் கம்பியை முறையாக சரி செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.