கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள கேரள எல்லை பகுதியை சேர்ந்தவர்கள் இரு சிறுமிகள். இவர்களை அதே பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் காதலிப்பதாக கூறி, கடந்த சில மாதங்களாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமிகளின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இளைஞர்கள் சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது உறுதியானது.
இதற்கு வாலிபர்களின் நண்பன் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து 3 வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - போக்சோவில் ஒருவர் கைது