கோயம்புத்தூர்: மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் கேரள வனப்பகுதியிலிருந்து ஏராளமான யானைகள் ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பவானி சாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வழியாக கர்நாடகா முத்தங்கா வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதிக்குள்பட்ட திருமாலூரில் உடல் நலக்குறைவால் ஆண் காட்டு யானை நின்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறையினர் யானையின் உடல் நிலை குறித்து மருத்துவர் மூலம் கண்டறிந்தனர்.
தொடர்ந்து அந்த யானைக்கு பழங்கள் மூலம் மருந்துகள் கொடுத்த நிலையில் இன்று (செப். 8) உயிரிழந்தது.
இதையும் படிங்க: மாநகரின் மத்தியில் செந்நாய் உலா