ETV Bharat / state

திமுக கவுன்சிலரின் கணவர் அட்டூழியம் - சுகாதாரப்பணியாளர்கள் வேதனை

author img

By

Published : Sep 22, 2022, 5:28 PM IST

Etv Bharatதிமுக கவுன்சிலரின் கணவர் அட்டூலியம்
Etv Bharatதிமுக கவுன்சிலரின் கணவர் அட்டூலியம்

திமுக கவுன்சலரின் கணவர், சுகாதார அலுவலகத்தில் பணியாளர்களின் வருகைப்பதிவேட்டை எடுத்து ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரியின் கணவர் திராவிட மணி என்பவர் நேற்று (செப்.21) காலை 6 மணியளவில் சுகாதார அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்துகொண்டு அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகைப்பதிவேட்டை எடுத்து ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதாரப்பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. பணியாளர்களை எந்தெந்த இடத்திற்கு நீங்கள் பணி செய்ய வேண்டும் என்றும்; யார் எந்த இடத்தில் பணிபுரிய இருக்கிறார்கள் எனத் தனக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

மேலும், தான் சொல்லும் வேலைகளை, செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார். இது அலுவலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுக கவுன்சிலரின் கணவர் அட்டூழியம் - சுகாதாரப்பணியாளர்கள் வேதனை

இதுகுறித்து சுகாதாரப் பணியாளர்கள் கூறுகையில், கோவை மாநகராட்சி ஆணையாளர் இதில் தலையிட்டு இதுபோன்று 100 வார்டுகளிலும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மது குடிக்கப்பணம் தராத தாயை உயிரோடு எரித்த கொடூர மகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.