கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான கல்யாணி யானையின் 29ஆவது பிறந்தநாள் விழாவனது இன்று (அக்.14) சிறப்பாக நடைபெற்றது. இந்த யானை 1991ஆம் ஆண்டு முதுமலை முகாமில் பிறந்தது. பின்னர் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாலரை வயது இருக்கும்போது இது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து 25 ஆண்டுகளாக இந்த யானையானது சிறப்பு பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா, திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று 29ஆவது பிறந்தநாள் காணும் கல்யாணி யானைக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் நெற்றிப் பட்டம் சூட்டி திருக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு, தீபாராதனை தீபவழிபாடு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கோயில் வழியாக வீதி உலா வந்தது. இதனை பக்தர்கள் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: உதகை மான் பூங்காவை நிரந்தரமாக மூட முடிவு!