ETV Bharat / state

கோவையில் ஆளுநர் தமிழிசை..சாலையில் தனியாக நின்ற காரில் வெடிகுண்டு சோதனை

author img

By

Published : Oct 27, 2022, 2:26 PM IST

Etv Bharat
Etv Bharat

கோவையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்ற வழியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோட்டைமேடு பகுதியில் ஈஸ்வரன் கோவில் முன்பு, கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்ததன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக, போலீசார் இன்று வரை 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே என்ஐஏ அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஜமேசா முபினின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சாலையோரத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை காவல் துறையினர் அகற்றி வருகின்றனர்.

இதனிடையே தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (அக்.27) சென்றார். அவர் செல்லும் வழியான கோவை-அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் சாலையோரத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கோவையில் ரோட்டில் தனியாக நின்ற காரில் வெடிகுண்டு சோதனை..

அப்போது வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அக்காரில் சோதனை நடத்தினர். அதன் பின்னர் அந்த காரின் உரிமையாளர் கண்டறியப்பட்டு அப்பகுதியில் இருந்த கார் அகற்றப்பட்டது.

விசாரணையில் கார் உரிமையாளர் அப்பகுதியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் ஊழியர் என்பதும், காரை நிறுத்தி சென்றதும் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் நிம்மதி அடைந்தனர். வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கோவை கார் வெடி விபத்து...மேலும் ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.