ETV Bharat / state

கோவையில் பரபரப்பு: கைதி தற்கொலை!

author img

By

Published : Feb 4, 2022, 10:15 AM IST

கோவையில் பரபரப்பு
கோவையில் பரபரப்பு

கொலை, கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் 2020ஆம் ஆண்டு நகைக்காக ஒரு பெண்ணை கொலைசெய்த வழக்கில் கடந்தாண்டு ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டு குன்னூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அங்கிருந்து கோவை மத்திய சிறைக்கு சக்திவேல் மாற்றப்பட்டு ஒன்பதாவது பிளாக்கில் விசாரணை கைதியாக இருந்தார். கடந்த சில நாள்களாக சக்திவேல் சிறை வளாகத்தில் யாருடனும் பேசாமல் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 3) அதிகாலை தான் அணிந்திருந்த லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பந்தைய சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : திமுக வட்டசெயலாளர் கொலை வழக்கு: 7 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.