ETV Bharat / state

இளம் பெண் உயிரிழப்பு... சாலை மறியலில் ஈடுபட்ட உறனவினர்கள் கைது

author img

By

Published : Jul 18, 2019, 12:30 AM IST

இளம் பெண் உயிரிழப்பு... சாலை மறியலில் ஈடுபட்ட உறனவினர்கள் கைது

கோவை: இளம் பெண்ணின் உயிரிழப்பை தற்கொலையாக மாற்ற காவல்துறை முயற்சிப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஷோபனா (25). இவர் பாப்பப்பட்டி பிரிவில் உள்ள பியூட்டி பார்லரில் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்ற அவர், மாலை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் பியூட்டி பார்லருக்கு அலைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டும் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.

சிறிது நேரம் ஆன பிறகு, பியூட்டி பார்லரிலிருந்து அழைத்து, ’ஷோபனா அறையில் சென்று தாழிட்டு கொண்டதாகவும், உடனடியாக வருமாறு’ அவரது பெற்றோருக்கு இரவு 7.30 மணிக்கு கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் வருவதற்கு முன்னதாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தூக்கிட்ட நிலையில் இருந்த ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட உறனவினர்கள் கைது

பியூட்டி பார்லரில், ஷோபனா தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருப்பார் எனவும் அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், பியூட்டி பார்லரின் உரிமையாளர் தற்கொலை என புகார் கொடுத்திருப்பதை காவல்துறையினர் எந்தவித விசாரணையுமின்றி ஏற்றுக்கொண்டதாக கூறி ஷோபானாவின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட எதையும் ஆராயாமல் கொலையை தற்கொலையாக மாற்ற சூலூர் காவல் துறையினர் முயற்சிப்பதாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினார். ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வாரத்தை நடத்தியும், கலையாததால் அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சித்தனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட ஷோபனாவின் உறவினர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Intro:இளம் பெண்ணின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்Body:கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த பத்மநாதன், பேபி தம்பதியின் இரண்டாவது மகள் ஷோபானா (25). ஷோபானா பாப்பப்பட்டி பிரிவில் உள்ள பீயூட்டி பார்லரில் பகுதிநேரமாக பீயூட்டிஷனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்ற ஷோபானா, மாலை வீடு திரும்பாததால் பீயூட்டி பார்லருக்கு ஷோபானாவின் பெற்றோர்கள் அலைப்பேசியில் அழைத்துள்ளனர். ஆனால் மறுமுனையில் யாரும் எடுக்கவில்லை என்றும், சிறிது நேரம் கழித்து பீயூட்டி பார்லரிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், ஷோபனா அறையில் சென்று தாழிட்டு கொண்டதாகவும், உடனே வருமாறும் இரவு 7.30 மணி அளவில் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உறவினர்கள் வருவதுடன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பீயூட்டி பார்லரில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஷோபானாவின் நிலை தற்கொலை செய்து கொண்டிருக்க முடியாது என்றும், கொலை என்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால், பீயூட்டி பார்லரின் உரிமையாளர் தற்கொலை என புகார் கொடுத்திருப்பதை காவல்துறையினர் எந்தவித விசாரணையுமின்றி ஏற்றுக்கொண்டதாக கூறி ஷோபானாவின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே திருச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக ஆம்புலன்ஸ், பணி, பள்ளி முடிந்து சென்றவர்கள் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானார்கள். ரேஸ் கோர்ஸ் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சு வாரத்தை நடத்தியும், கலையாததால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். அதனால், காவல்துறையினருக்கும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பீயூட்டி பார்லரில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட எதையும் ஆராயாமல் கொலையை தற்கொலையாக மாற்ற சூலூர் காவல்துறையினர் முயற்சிப்பதாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டினார். காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால், பெண்கள் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.