கோடநாடு கொலை வழக்கு : மோசஸ் உள்ளிட்ட இருவரிடம் 7.30 மணி நேரம் நடைபெற்ற விசாரணை..

author img

By

Published : May 6, 2022, 10:04 AM IST

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் police-are-investigating-moses-who-is-accused-in-kodanad-murder-and-robbery-case கோடநாடு கொலை வழக்கு : மோசஸிடம் 7.30 மணி நேரம் நடைபெற்ற விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆறாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த பிஜின்குட்டி சகோதரர் மோசஸ் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 7.30 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது வரை 200 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (மே.5) கோடநாடு கொலை வழக்கில் ஆறாவது குற்றவாளியான பிஜின்குட்டியின் சகோதரர் மோசஸ் உட்பட இருவரிடம் விசாரணை நடைபெற்றது.

ஏற்கனவே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக் ஜெயராமன், அதிமுக பிரமுகர்கள் சஜீவன், சஜீவனின் சகோதரர் சிபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, அவரது மகன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை

மேலும், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் போலீசார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே விசாரணை நடத்தியவர்களையும் மீண்டும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆறாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த பிஜின்குட்டி சகோதரர் மோசஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில்  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை

அதிமுக மாநில வர்த்தக அணி பொறுப்பாளராக இருக்கும் சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர். சிபி-யிடம் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவரும், மோசஸூம் ஏற்கனவே நண்பர்கள் என்பது தெரியவந்தது. மேலும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அன்று இரவு மோசஸிடம் குற்றவாளிகள் செல்போனில் பேசி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் மோசஸிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, காலை 10.30 மணிக்குக் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு ஆட்டோவில் மோசஸ் உட்பட 3 பேர் வந்தனர். 3 பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடைபெறும் மையத்திற்குச் சென்ற போது சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவர் மட்டும் வெளியே வந்தார். மோசஸ்சுடன் விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட நபர் குறித்த விபரங்களை தனிப்படை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதையும் படிங்க: கோடநாடு கொலை : சசிகலாவிடம் 100 கேள்விகள்...!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.