ETV Bharat / state

இந்து மகா சபை இளைஞரணி தலைவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

author img

By

Published : Mar 18, 2021, 7:36 AM IST

Petrol bomb blast on Hindu Maha Sabha youth leader's car
Petrol bomb blast on Hindu Maha Sabha youth leader's car

கோவை: துடியலூர் அருகே இந்து மகா சபா மாநில இளைஞர் அணித்தலைவரின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ். இவர் இந்து மகா சபா மாநில இளைஞர் அணித்தலைவராக பதவிவகித்து வருகிறார். தவிர அப்பகுதியில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று (மார்ச்.18) இரவு உணவகத்தை விட்டு காரில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் காரின் மீது முட்டைகளை வீசி உள்ளனர். உடனடியாக சுபாஷ் இறங்கிப் பார்த்தபோது கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை தீ வைத்து கார் மீது வீசியுள்ளனர்.

இதில், கார் தீ பிடிக்காமல் இருந்ததால் உயிர் தப்பிய சுபாஷ், சம்பவம் குறித்து தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து மகா சபை இளைஞரணி தலைவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தற்போது, காரின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசும் சிசிடிவி காட்சியை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும், அதனைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

இதையும் படிங்க: கரூரில் 34 கிலோ குட்கா பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.