ETV Bharat / state

பொள்ளாச்சி சம்பவத்தில் குண்டர் சட்டம் ரத்தானதை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Nov 16, 2019, 2:31 AM IST

Opposition to the repeal of the Thug Act in Pollachi, பொள்ளாச்சி சம்பவத்தில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பொள்ளாச்சி பகுதியில் கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட ஐந்து பேரை பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

இந்த வழக்கை விசாரணை நடத்திய சி.பி.ஐ., ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு மீது போடப்பட்ட குண்டர் சட்டம் போதிய ஆதாரம் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டது.

Opposition to the repeal of the Thug Act in Pollachi, பொள்ளாச்சி சம்பவத்தில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு

இதை கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாதர் சங்கதின் தலைவி கு.வாசுகி, 'இந்த வழக்கில் திட்டமிட்டு குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியாகவே கருத்துவதாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கை பாரபட்சமின்றி நடத்த மாதர் சங்கம் வலியுறுத்தல்!

Intro:arpattamBody:arpattamConclusion:பொள்ளாச்சியில் பாலியல் குற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். 100க்கும் மேற்ப்பட்டோர் கைது .

பொள்ளாச்சி- நவ- 15

பொள்ளாச்சி பகுதியில் கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கை விசாரனை நடத்திய சி.பி.ஐ., தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் இதை அடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் சபரிராஜன், திருநாவுக்கரசு மீது போடப்பட்ட குண்டர் சட்டம் போதிய ஆதாரம் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் அதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ்., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கு விசாரணையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக முறையான ஆவணங்கள் பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாதர் சங்கதின் தலைவி கு. வாசுகி இந்த வழக்கில் திட்டமிட்டு குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியாகவே கருத்துவதாகவும் சம்பந்தப்பட்ட காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தை போதையற்ற மாநிலமாகவும் வன்முறையற்ற மாநிலமாகவும் மாற்றுவோம் என்றும் மக்கள் நீதியை கையில் எடுத்தால் தான் இதற்கு நீதி கிடைக்கும். சி.பி.சி.ஐ. டி., எப்படி மாநில அரசின் கை பாவையாக இருக்கிறதோ அதே போல் சி.பி.ஐ., யும் மத்திய அரசின் கைப்பாவையாக தான் இருக்கிறது எனவே மத்திய புலனாய்வு பிரிவு அரசியல் மாச்சரியங்களை ஒதுக்கி தள்ளி முறையாக நடந்து கொள்ளும் என்று நம்புகிறோம். மேலும் இந்த பாலியல் வழக்கு சம்பந்தமாக வீடியோ மற்றும் ஆடியோ கேசட்டுகள் தங்களிடம் உள்ளதாகவும் இந்த வழக்கில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பகிரங்கமாக சொன்னது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களையும் சாட்சி சொல்ல விடாமல் தடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கம் உட்பட அனைத்து கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.