ETV Bharat / state

செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரி சோதனை: 7 கோடி பறிமுதல்

author img

By

Published : Dec 9, 2020, 11:19 AM IST

Updated : Dec 9, 2020, 9:19 PM IST

செட்டிநாடு குழும நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை!
செட்டிநாடு குழும நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை!

சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்பட நாடு முழுவதும் செட்டிநாடு குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ 7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

எம்ஏஎம் ராமசாமி செட்டியாருக்குப் பிறகு, அவருடைய வளர்ப்பு மகன் அய்யப்பனைத் தலைவராக கொண்டு செட்டிநாடு குழுமம் செயல்பட்டுவருகிறது. அக்குழுமத்துக்குச் சொந்தமாக நாட்டின் பல இடங்களில் 2015ஆம் ஆண்டில் வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து வருமான வரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் மீண்டும் வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து இன்று (டிச. 09) காலை முதல் சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்தின் பல்வேறு அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

செட்டிநாடு குழும நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை!
செட்டிநாடு குழும நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை!

அதுமட்டுமின்றி, கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள செட்டிநாடு பிரைவேட் லிமிடெட் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் 200-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று (டிச. 09) காலை 8 மணிமுதல் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ 7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9815866_chettinadu-2.jpg

இதையும் படிங்க...'2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல மோசடிகளைச் செய்த திமுக ஊழலைப் பற்றி பேசலாமா?'

Last Updated :Dec 9, 2020, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.