கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி திலகாவதி (எ) ஆஷா (42). இவருக்கு திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆன நிலையில் சுபாஷ் என்ற ஆண் குழந்தையுள்ளது.
திலகவதி ராஜனை இரண்டாவது கணவராக திருமணம்செய்துள்ளார். இவரது முதல் கணவர் சுதாகர், இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜன் வால்பாறையில் உள்ள பிரபல உணவகத்தில் சூப்பர்வைசராகப் பணிபுரிகிறார்.
இவருக்கும் மனைவி திலாகாவதிக்கும் காலையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் வேலைக்குச் சென்றவுடன் திலகவதி தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், மதியம் ராஜன் வீட்டிற்கு வந்தபோது திலகவதி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: 70 நாள்கள் போலீஸை கதரவிட்ட கொள்ளையன்: வாக்குமூலத்தைக் கேட்டு ஆடிபோன போலீஸ்!