ETV Bharat / state

மேயராகப் போட்டியிடும் 10ஆவது மட்டுமே படித்த மாமன்ற உறுப்பினர்

author img

By

Published : Mar 3, 2022, 8:30 PM IST

மேயராகக் களமிறங்கப் போட்டியிடும் பத்தாவது மட்டுமே படித்த மாமன்ற உறுப்பினர்
மேயராகக் களமிறங்கப் போட்டியிடும் பத்தாவது மட்டுமே படித்த மாமன்ற உறுப்பினர்

திமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் கல்பனா ஆனந்த் மேயர் வேட்பாளராக, திமுக தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோவை: திமுக சார்பில் கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 19ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான கல்பனா ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் மணிகாரம்பாளையம் பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கல்பனா 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். ஆனந்தகுமார் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கோவையின் முதல் பெண் வேட்பாளர்

இந்நிலையில், மேயராக நிறுத்தப்பட்டுள்ள கல்பனா, கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் வேட்பாளர் என்கிற பெருமையும், திமுகவின் கோவை மாநகராட்சிக்கான முதல் மேயர் வேட்பாளர் என்கிற பெருமையும் பெறுகிறார்.

கட்சியின் மாவட்டப் பொறுப்பில் உள்ள சிலர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேயர் பதவி வாங்கக் கடும் போட்டி போட்டாலும் அவர்கள் மீது புகார்களும், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் தொடர்பு உள்ளிட்ட சர்ச்சைகளும் இருந்த நிலையில் கல்பனா மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் கல்பனா, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் ஆவார்.

இது குறித்து கல்பனா கூறுகையில், 'கோவை மாநகராட்சியை தமிழ்நாட்டின் முதன்மை மாநகராட்சியாக கொண்டு வருவதே லட்சியம். அடிப்படை வசதிகள் மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்' எனவும் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் திட்டம்

கோவை மாநகராட்சியின் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெற்றிச்செல்வன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இருக்கும் 72ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர், வேலுமணியின் சொந்த வார்டில் இருந்து கொண்டே, தொடர்ந்து எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தி சிறைக்கும் சென்றுள்ளார். இதன் காரணமாகவே வெற்றிச்செல்வன் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரான இவரை வைத்து வேலுமணியின் வார்டில் திமுகவை வளர்க்க அமைச்சர் செந்தில்பாலாஜி மேற்கொண்ட முயற்சி தான் இது என அக்கட்சியினர் பேசிக்கொள்கின்றனர்.

இதையும் படிங்க:'உக்ரைனிலுள்ள தமிழர்களை மீட்க திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி உட்பட 4 பேர் வெளிநாடு பயணம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.