ETV Bharat / state

தேங்காய் விலை வீழ்ச்சியால் வியாபாரி தற்கொலை

author img

By

Published : Aug 3, 2022, 5:10 PM IST

Etv Bharat வியாபாரி தற்கொலை
Etv Bharat வியாபாரி தற்கொலை

பொள்ளாச்சி அருகே தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக வியாபாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கொப்பரை தேங்காய் விலையும் குறைந்துகொண்டே வருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகேவுள்ள வாழைக்கொம்பு நாகூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சம்பத்குமார் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியில் இருந்த அவர் தென்னை மரம் வளர்வதற்காக பயன்படுத்தப்படும் மாத்திரையை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தககவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை காவல் துறையினர், சம்பத்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலையைக் கைவிடுக
தற்கொலையைக் கைவிடுக

இதையும் படிங்க: 'ஆன்மிக சுற்றுலா' என்ற பெயரில் பண மோசடி - 2 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.