அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் - இருவர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Dec 19, 2021, 8:01 PM IST

அரசு பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்
அரசு பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் ()

கோவையில் மதுபோதையில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய சம்பவத்தில் இரண்டு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கோவையில் நேற்று இரவு (டிச.18) சிங்காநல்லூரில் இருந்து ஒண்டிபுதூர் டிப்போவிற்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் ஏறிய மூன்று பேர் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு பேருந்தை சூலூருக்கு இயக்கும்படி வாக்குவாதம் செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நடத்துநர்

பேருந்து வேறு எங்கும் செல்லாது, டிப்போவிற்கு செல்கிறது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவர், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடத்துநர் கவியரசனை தாக்கிவிட்டு பேருந்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவத்தை அறிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் குற்றவாளியை விரைந்து பிடிக்கும்படி சிங்காநல்லூரில் பேருந்துகளை நிறுத்திப் போராட்டம் நடத்தினர்.

இருவர் மீது வழக்குப்பதிவு

சிங்காநல்லூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்தநிலையில் இன்று (டிச.19) நடத்துநரை தாக்கிய சம்பவத்தில் இரண்டு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக ஒபிசி செயலாளர் கொலை - NIA விசாரிக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.