ETV Bharat / state

பள்ளி மாணவர்கள் மூவருக்கு கரோனா தொற்று!

author img

By

Published : Dec 7, 2021, 4:52 PM IST

கரோனா தொற்று உறுதி
கரோனா தொற்று உறுதி

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த புரவி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 700 - க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில், சிலர் கேரளா மாநிலத்தில் இருந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள், ஒரு மாணவி என மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா தொற்று
பள்ளி மாணவர்கள் மூவருக்கு கரோனா தொற்று

இதனையடுத்து பள்ளிக்கூட வளாகம் மற்றும் வகுப்பறைகளில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாகப் பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

பின்னர் மீதமுள்ள மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. கரோனா தொற்று பாதித்த மூன்று மாணவர்களும் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். முழுமையான பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு பள்ளி மீண்டும் இயங்கும் என தலைமையாசிரியர் உதயராணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதுகுளத்தூர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.