ETV Bharat / state

கோவையில் திமிங்கிலத்தின் எச்சத்தை விற்க முயன்றவர் கைது..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 11:03 PM IST

ambergris-worth-rs-6-lakh-seized-in-coimbatore
திமிங்கலத்தின் எச்சத்தை விற்க்க முயன்றவர் கைது

கோயம்புத்தூரில் ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள திமிங்கிலத்தின் எச்சத்தை, விற்க முயன்ற நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சட்ட விரோதமாகத் திமிங்கிலத்தின் எச்சத்தை (அம்பர்கிரிஸ்) விற்பனை செய்ய உள்ளதாகத் திருப்பூர் வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை வனத்துறையினர் மற்றும் திருப்பூர் வனத்துறையினர் இணைந்து வாகராயன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர்.

அப்போது அம்பர்கிரிஸ் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 6 லட்சம் மதிப்புடைய 3 கிலோ அம்பர்கிரிஸை பறிமுதல் செய்து வனத்துறையினர் இளங்கோவனை கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை கோவை கோவை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கேரளாவில் உள்ள ஒருவரிடம் இருந்து இந்த அம்பர்கிரிஸை வாங்கியதாகவும். இதனைச் சென்னையில் விற்க முயன்ற போது விற்பனை செய்ய முடியாததால் இடைத்தரகர்கள் மூலம் கோவையில் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே யானைத் தந்தம் கடத்திய வழக்கில் கேரள வனத்துறையினர் இளங்கோவனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கிலத்தின் எச்சம் ஒரு வித ரசாயனத்தைக் கொண்டதாகும். இதனை வெளிநாடுகளில் வாசனைத் திரவியத்திற்குப் பயன்படுத்துவர். இது லட்சக்கணக்கான மதிப்புடையவை என்பதால் இதனைப் பலர் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இன்னும் சிலர் திமிங்கிலத்தின் வாந்தியைப் போன்று செயற்கையாக உருவாக்கி போலியாக விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஜப்பானை தாக்கியது சுனாமி - அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.