மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் கரோனா பரவலின் காரணமாக, அப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்போராட்டங்கள் தொடங்கப்பட்டு, ஆறு மாதங்கள் நிறைவு ஆன நிலையில் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் விவசாயிகள், சில தன்னார்வ அமைப்புகள், கட்சியினர் என வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அவரவர் இல்லங்களின் முன்பு, கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
![வேளாண் திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டம் தொடங்கி இன்று 6 மாதங்கள் நிறைவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-black-flag-farmers-law-photo-script-tn10027_26052021113323_2605f_1622009003_456.jpg)
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் போராட்டம்: அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்