ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!

author img

By

Published : Jul 31, 2021, 11:26 AM IST

போக்சோ நீதிமன்றம்
போக்சோ நீதிமன்றம்

கோவை: ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு என்கிற மச்சுபையன். இவர் 2019ஆம் ஆண்டும் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து அந்தச் சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் செந்தில் பிரபுவை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு முன்னதாக கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை.31) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ரவி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செந்தில் பிரபுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்குமாறும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பென் ஸ்டோக்ஸ் ஓய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.