ETV Bharat / state

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

author img

By

Published : Jun 28, 2023, 10:46 PM IST

Updated : Jun 28, 2023, 11:08 PM IST

next dgp and chief secretary
கோப்புபடம்

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? என்பது பற்றிய அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்பு உள்ளது என அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆகியோர் நாளை மறுநாள்(ஜூன் 30) ஓய்வு பெறுகிறார்கள். ஆகவே புதிய நபர்கள் பற்றி எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தமிழ்நாடு அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் தலைமைச்செயலாளராக இறையன்பு உள்ளார். அதே போல, தமிழ்நாட்டின் டிஜிபியாக சைலேந்திர பாபு செயல்பட்டு வருகிறார். இந்த இரண்டு உயர் அலுவலர்களின் பதவிக்காலமும் ஜூன் 30ல் (நாளை மறுநாள்) நிறைவடைகிறது. ஆகவே, இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக மூத்த அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கானப் போட்டியில், அரசுக்கு நெருக்கமானப் பலரும் டிஜிபி கனவில் இருந்து வருகின்றனர். அதேபோல், தற்போதைய சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், சஞ்சய் அரோரா மற்றும் சந்தீப் ராய் ரத்தோர், அமல்ராஜ் ஆகியோரின் பெயர் அடிபடுவதாகவும் அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் தலைமைச்செயலாளர் பதவிக்கு சிவதாஸ் மீனா, ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளிட்ட உயர் ஐஏஎஸ் அலுவலர்கனின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது எனவும் அறியமுடிகிறது. இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இதுகுறித்தான அறிவிப்பு எந்நேரமும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தள்ளு.. தள்ளு.. தள்ளு: ஸ்டார்ட் ஆகாமல் பாதியில் நின்ற காவல் வாகனம்

Last Updated :Jun 28, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.