மத்திய அரசின் திட்டங்கள் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது - இணை அமைச்சர் அஸ்வினி குமார்

author img

By

Published : Sep 27, 2022, 9:36 PM IST

Updated : Sep 27, 2022, 10:39 PM IST

Etv Bharatமத்திய அரசின் திட்டங்கள் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார்

பிரதமர் நரேந்திரமோடி அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் அரசியல் லாபத்திற்காக இல்லாமல் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்தார்.

சென்னை: பிரதமர் நரேந்திரமோடி அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் அரசியல் லாபத்திற்காக இல்லாமல் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது என்றும், PFI அமைப்பு இளைஞர்களை sleeper cells போல பயன்படுத்துவதால் அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், "சென்னைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். சென்னை விமான நிலையத்தில் எனக்கு அமோக வரவேற்பு தந்தனர். அதை பார்த்தபோது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்திற்கு அதிகளவிலான உறுப்பினர்கள் செல்வது உறுதி என்று தெரிகிறது. மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி வருவதும் உறுதி.

மத்திய அரசின் திட்டங்கள் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது - இணை அமைச்சர் அஸ்வினி குமார்

சில நாட்களுக்கு முன்பு என்ஐஏ சோதனை நடத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். PFI அமைப்பு இளைஞர்களை sleeper cells ஆக பயன்படுத்துகிறது. ஆகவே உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆணைப்படி அந்த இயக்கத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில அரசும் பிஎஃப்ஐ அமைப்பின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் அமைதியானவர்கள். ஆனால் இங்கு ஆட்சியில் இருப்போரின் செயல்பாடு வன்முறையையும் , தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பிரதமர் நாட்டு முன்னேற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளார். பிரதமரின் திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக இல்லாமல் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது. பாஜக சித்தாந்த ரீதியாக நாட்டை முன்னேற்றுவது பற்றி யோசிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதேபோல் செயல்பட்டால் அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர் .

அண்ணாமலை மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அபரிதமாக உள்ளது. ராகுல் காந்தி மக்களை ஒருங்கிணைக்க பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். காங். தலைவர்களை முதலில் ஒருங்கிணைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியால் ஒரு தலைவரை உருவாக்க முடியவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தபின் இதுவரை எந்த ஊழலும் நடக்கவில்லை , பயங்கரவாத்த்தை முழுவதும் தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் பிரதமர் படம் வைக்கப்படவில்லை என்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் மக்கள் மனதில் பிரதமர் இடம்பெற்றுள்ளார். ஆனால் ரேசன் கடைகளுக்கு மத்திய அரசும் மானியம் வழங்குவதால் முறைப்படி பிரதமர் படம் அங்கு வைக்கப்பட வேண்டும் என்றார்.

முன்னதாக சென்னை பாண்டி பஜாரில் உள்ள ரேசன் கடைக்கு சென்ற அஸ்வினி குமார் அங்கு அரிசி , கோதுமை , பருப்புகள் , உப்பு , தூள் உள்ளிட்டவையின் அளவு மற்றும் விலைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க:’அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ - திருமாவளவன் எச்சரிக்கை

Last Updated :Sep 27, 2022, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.