ETV Bharat / state

தமிழ்நாடு அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

author img

By

Published : Oct 28, 2020, 8:04 PM IST

Updated : Oct 28, 2020, 8:12 PM IST

minister vijayabaskar
minister vijayabaskar

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனுடன் காணொலி காட்சி மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பண்டிகை மற்றும் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். சமீபகாலமாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தமிழ்நாடு அரசை பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு

Last Updated :Oct 28, 2020, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.