ETV Bharat / state

மோசமான வானிலை : இந்தியா - இலங்கை பயணிகள் விமானம் ரத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 2:32 PM IST

Chennai airport:
சென்னை விமான நிலையம்

Chennai airport: மோசமான வானிலை காரணமாக இன்று அதிகாலை இலங்கையில் இருந்து சென்னை வர வேண்டிய விமானமும், சென்னையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது.

சென்னை: மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவைகள் இலங்கைப் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக அதிகாலை 1 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் புறப்பட்டு அதிகாலை 2 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடையும். அதே விமானம், மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு இலங்கை சென்றடையும். இந்த இரு விமான சேவைகளும் வானிலை காரணமாக இன்று அதிகாலை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் இன்று (நவ. 6) காலை 7:30 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திலும், அதேப்போல் சென்னையில் இருந்து காலை 9:50 மணிக்கு இலங்கைக்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திலும் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிப்பதை எதிர்த்து வழக்கு - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.