ETV Bharat / state

டிடிஎஃப் வாசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 7:07 PM IST

சிறை சென்ற பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்
சிறை சென்ற பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்

TTF Vasan: சாலையில் வேகமாக சென்றதால் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

சிறை சென்ற பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சமீபத்தில் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு அவரது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டபோது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

இவ்வாறு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தூக்கி வீசப்பட்டு சாலை ஓரப்பள்ளத்தில் விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வரும் நிலையில் சமூக வலைதளவாசிகளிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வலது கை முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய டிடிஎஃப் வாசன் மீது தமிழ்நாடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் டிடிஎஃப் வாசன் சென்றதாகவும், குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகத்தில் பயணித்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது ஏற்கனவே இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி 279, 336 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இன்று (செப்.19) அதிகாலை திருவள்ளூர் அருகே பூங்கா நகர் பகுதியில் இருந்த டிடிஎஃப் வாசனை பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் மீது மேலும் கூடுதலாக 308, 184, 188 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக டிடிஎஃப் வாசனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டிடிஎஃப் வாசன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவரது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

அவரது தரப்பு வாதங்கள் கேட்கப்பட்ட நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி வரை டிடிஎஃப் வாசனை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் உத்தரவையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வாசனை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: Vijay Antony Daughter Dead: விஜய் ஆண்டனி மகள் உடல் மாலை அடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.