ETV Bharat / state

தண்டையார்பேட்டையில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

author img

By

Published : Mar 4, 2021, 1:41 PM IST

traffic-due-to-power-poles-tilted-at-tondiarpet-chennai
traffic-due-to-power-poles-tilted-at-tondiarpet-chennai

சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் சாலையில் நிற்க வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் அவற்றின் மீது செல்லும் ஒயர்களின் பாரம் தாங்காமல் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட கண்ணர் தெரு, வரதராஜபெருமாள் கோயில் தெரு பகுதிகளில் சாலையோரம் நிற்க வைக்கப்பட்டிருக்கும் மின்கம்பங்கள், மின் ஒயர்களின் அதிக பாரம் தாங்க முடியாமல் சாலையின் குறுக்கே சாய்ந்துள்ளன.

அருகருகே இரண்டு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பொதுமக்கள் பீதியுடன் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலையில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாரிமுனையிலிருந்து தண்டையார்பேட்டை வரும் ஒருவழி சாலையில் வாகனங்கள், பேருந்துகள் என எதுவும் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் அலுவலர்கள் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், தற்போது ஐந்து மணி நேரம் தாமதமாக வந்து மின்கம்பங்களை சீர்படுத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தனர். மின்கம்பங்கள் அடிக்கடி சாய்ந்து விழுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோடையை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய காவல் உயர் அலுவலர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.