ETV Bharat / state

ரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்கள்: உடலை கொண்டுவர திமுக எம்பி டி.ஆர். பாலு வலியுறுத்தல்!

author img

By

Published : Aug 11, 2020, 2:41 PM IST

டெல்லி: ரஷ்ய நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் உடல்களை, உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டுவர திமுக எம்பி டி.ஆர். பாலு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்கள்: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர திமுக எம்பி டி.ஆர். பாலு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்!
ரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்கள்: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர திமுக எம்பி டி.ஆர். பாலு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்!

ரஷ்யாவின், வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில், மருத்துவ படிப்பு படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஆர். விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாகு ஆகியோர் ஞாயிறு (ஆக. 9) அன்று வால்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் அவர்கள் உடல்களை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டுவர ஆவன செய்ய வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (ஆக. 11) நேரில் சந்தித்து கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளார்.

பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டுவர, ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அலுவலர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டி ஆர். பாலு வழங்கிய மற்றோரு கடிதத்தில், சென்னை கொளுத்துவாஞ்சேரியைச் சேர்ந்த ஆர். சந்தோஷ் குமார் என்பவர் மலேசியாவில் விசா முடிவுற்ற காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க...மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சி கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.