ETV Bharat / state

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 2:13 PM IST

Updated : Nov 4, 2023, 7:59 PM IST

TamilNadu Weather update
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

TamilNadu Weather update : கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவில் அதிகபட்சமாக கோவை மேட்டுபாளையத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை, பதிவான மழை அளவு 139.9 மில்லி மீட்டர் இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 202.4 மில்லி மீட்டர். இதனால், இயல்பை விட 34 சதவீதம் குறைவாக மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலையில், 40 சதவீதம் குறைவாக இருந்த நிலையில், தற்போது, 34% இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் இயல்பாக மழை அளவு 8.6 மில்லி மீட்டர் இருக்க வேண்டும். ஆனால், ஒரே நாளில் இயல்பை விட இருமடங்காக அதிகரித்து 16.9 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், "தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று (நவ. 4) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 5 ஆம் தேதி அன்று, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 6 ஆம் தேதி அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 7 ஆம் தேதி அன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 - 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

மழை பதிவு:

  • பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 13 செ.மீ மழை பதிவு
  • கமுதி (ராமநாதபுரம்) 12 செ.மீ மழை பதிவு
  • சிவகிரி (தென்காசி), மண்டலம் ஆலந்தூர் (சென்னை) தலா 12 செ.மீ மழை பதிவு
  • மண்டலம் 03 புழல் GCC (திருவள்ளூர்) 11 செ.மீ மழை பதிவு
  • புழல் ARG (திருவள்ளூர்) 11 செ.மீ மழை பதிவு
  • அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 11 செ.மீ மழை பதிவு
  • அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்) 10 செ.மீ மழை பதிவு
  • சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 10, மீனம்பாக்கம் (சென்னை), சென்னை விமானநிலையம், ஆலந்தூர் (சென்னை) தலா 9 செ.மீ மழை பதிவு
  • ஆயின்குடி (புதுக்கோட்டை), SRC குடிதாங்கி (கடலூர்) 8 செ.மீ மழை பதிவு

இதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் தூத்துகுடி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, திருவண்னாமலை, திருவள்ளூர், தென்காசி, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், தர்மபுரி, தேனி, மயிலாடுதுறை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 7 செ.மீ முதல் 1.செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: அரபிக்கடல் பகுதிகளில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தபடுகிறார்கள்.

இதேபபோல, சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் தூத்துகுடி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, திருவண்னாமலை, திருவள்ளூர், தென்காசி,திருப்பூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், தர்மபுரி, தேனி, மயிலாடுதுறை, வேலூர்,ஆகிய மாவட்டங்களில், 7 செ.மீ முதல் 1.செ.மீ வரை மழைப்பதிவாகி உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "மழை என்றதுமே வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறிவிட்டது" - மு.க.ஸ்டாலின்!

Last Updated :Nov 4, 2023, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.