ETV Bharat / state

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

author img

By

Published : Apr 28, 2022, 10:55 AM IST

Updated : Apr 28, 2022, 3:52 PM IST

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழ்நாடு தேர்வாளர் ஆணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில், மொத்தம் 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் 4 தேர்வுக்கு இன்று (ஏப் 17) மாலை 5 மணி வரை, 7 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் 24ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய இணைய தளங்களுக்குச் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். வரும் 28ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்

Last Updated :Apr 28, 2022, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.