இந்தியளவில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேசிய தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (ஏப்ரல் 8) வெளியிட்டார். அந்தப் பட்டியலில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ராவணன் செய்தியாளரிடம் கூறியதாவது, 'அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் கடந்தாண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த எங்கள் கல்லூரி இந்தாண்டு மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளது.