ETV Bharat / state

2023ஆம் ஆண்டு இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 7:08 PM IST

பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வு
பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வு

TN B.Ed counselling 2023: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு சேர்க்கை கலந்தாய்வு இன்று (செப்.19) சென்னையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரியில் துவங்கியது.

பி.எட் பட்ட படிப்பிற்கான கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) முதலாம் ஆண்டில் சேர்வதற்கு https://www.tngasa.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன. அதன் மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வுச் செய்து அளித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரியில் 900 இடங்களும், அரசு உதவிப்பெறும் 14 கல்லூரிகளில் 1140 இடங்களும் என 2040 இடங்களில் பி.எட் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், பி.எட் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று (செப்.19) துவங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரியில் நடைபெற்ற கலந்தாய்வினை கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தீபா பார்வையிட்டு, இடங்களை தேர்வு செய்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கலந்தாய்வு குறித்து கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தீபா கூறும்போது, "தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், அரசு உதவிப்பெறும் 14 கல்வியியல் கல்லூரிகளில் 1,140 இடங்கள் என மொத்தம் 2040 இடங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்" என தெரிவித்தார்.

மேலும், இம்மாதம் 11ஆம் தேதி வரை, 3,888 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில், 83 சதவீதம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களுக்கான கலந்தாய்வு இன்று (செப்.19) முதல் செப்.25ஆம் தேதி வரை நடைபெறுவதாகவும் கூறினார். தினமும் சராசரியாக 600 மாணவர்கள் வரை கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், முதல் நாளான இன்று காலையில் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றதாகவும், பின்னர், பிற்பகலில் மற்ற மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுவதாகவும் கல்லூரி கல்வி இணை இயக்குநர் தீபா தெரிவித்தார்.

இதையும் படிங்க: கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றிய இந்தியா; இந்தியா - கனடா நட்புறவில் பதற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.