ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கடாக வெளிநாட்டு பணம் பறிமுதல்

author img

By

Published : Jan 10, 2023, 9:01 AM IST

சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கடாக வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கடாக வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 75.5 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை: மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதன் காரணமாக அவரை நிறுத்தி உடைமைகளை சோதித்தனர். அதன் பின்பு அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது அவருடைய உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை வெளியில் எடுத்தனர். அதனுள் 760 கிராம் தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 37 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, பயணியை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த 2 பெண்கள் சுற்றுலா பயணிகளாக இலங்கை செல்ல வந்தனர். அவர்களை பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனை நடத்தினர். அவர்களின் ஆடைகளுக்குள் இருந்து கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினர்.

அதன் இந்திய மதிப்பு ரூ.38.5 லட்சம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூபாய் 75.5 லட்சம் மதிப்புடைய முக்கால் கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்து 2 பெண்கள் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இதையும் படிங்க: விமானத்தில் கட்டு கட்டாக கடத்தி வரப்பட்ட அமெரிக்க டாலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.