ETV Bharat / state

சாப்பாட்டில் விஷம்.. துடிதுடித்த கணவன்.. மனைவி மீது புகார்!

author img

By

Published : Oct 23, 2021, 8:38 AM IST

விஷம்
விஷம்

நான்சி மேரிக்கும் அவருடன் வேலை பார்த்துவரும் வேறொரு நபருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட ஆனந்தனின் சாப்பாட்டில் நான்சி மேரி விஷம் வைத்துள்ளார்.

சென்னை: வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் ஆனந்தன்(31). இவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருணமாகி நான்சி மேரி என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

இவரது மனைவி நான்சி மேரி ஜெமினி பிரிட்ஜ் பகுதியிலுள்ள தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் இருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்துவைத்தனர்.

இதனையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 15 நாள்களாக மனைவி நான்சி மேரிக்கும் அவருடன் வேலை பார்த்துவரும் வேறொரு நபருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தனது மனைவியிடம் ஆனந்தனிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை மனதில் வைத்து நேற்று முன்தினம் இரவு (அக்.21) ஆனந்தனுக்குக் கொடுத்த சாப்பாட்டில் மனைவி விஷம் வைத்துள்ளார்.

அவர் சாப்பிட்ட சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவி உணவில் விஷம் கலந்து கொடுத்து தன்னை கொலை செய்ய முயன்றதாக உறவினர்களிடம் ஆனந்தன் தெரிவித்தார்.

உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.