ETV Bharat / state

பட்டாக்கத்தியுடன் காணொலி வெளியிட்ட இளைஞர்கள் கைது

author img

By

Published : Jun 16, 2021, 10:40 AM IST

பட்டாகத்தி  பட்டாகத்தியுடன் விடியோ  தாம்பரம் பட்டாகத்தியுடன் விடியோ வெளியிட்ட இளைஞர்கள்  காவல் துறையினர்  சென்னை தாம்பரம் பட்டாக்கத்தி விவகாரம்  குற்றச் செய்திகள்  chennai news  chennai latest news  chennai thambaram patta kaththi issue  patta kaththi  crime news  thamburam youths were arreted for leaking vedioes with patta kaththi
பட்டாக்கத்தியுடன் விடியோ வெளியிட்ட இளைஞர்கள்: கைது செய்த காவல் துறையினர்

பட்டாக்கத்தியுடன் காணொலி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரண்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

சென்னை: தாம்புரம் அருகே இளைஞர்கள் மூன்று பேர் கையில் பட்டாக்கத்தி வைத்தவாறு காணொலி ஒன்றை பதிவுசெய்துள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இக்காணொலி அதிகம் பகிரப்பட்டுவந்தது.

இக்காணொலி தாம்புரம் காவல் துறையினர் பார்வைக்கு வந்ததையடுத்து, இம்மூவரையும் காவல் துறையினர் தேடிவந்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


விசாரணையின்போது காணொலியில் இடம்பெற்ற இருவரை காவல் துறையினர் கண்டறிந்தனர். அவர்கள் வேங்கை வாசல் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (19), மனோஜ் (21) எனத் தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, பின் சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மாஞ்சா கயிற்றால் விபரீதம்: கழுத்தில் நூல் அறுத்து காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.