சென்னை புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய கன மழை

author img

By

Published : May 14, 2022, 8:06 PM IST

சென்னை புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய கன மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வந்த நிலையில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வந்த நிலையில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இன்று (மே14) காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கின.

இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், மீனம்பாக்கம் விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை தாம்பரம் சேலையூர், வண்டலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளது. மேலும் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இன்னும் சில நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் கன மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இனி பஸ்ல ஒரசுனா அவளோதான்... தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.