ETV Bharat / state

"தமிழ்நாட்டிற்கான தனி கல்விக்கொள்கை வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படாது"

author img

By

Published : Apr 13, 2023, 6:28 PM IST

மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழுவின் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க செப்டம்பர் மாதம் வரையில் அவகாசம் கேட்க உள்ளதாவும், தமிழ்நாட்டில் மாநிலக் கல்விக் கொள்கை வரும் கல்வியாண்டில் அமுல்படுத்தப்படாது எனவும், அக்குழுவின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான முருகேசன் தெரிவித்துள்ளார்.

Tamilnadu
தனி

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு தலைவர் முருகேசன் பேட்டி

சென்னை: நாடு முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த தேசிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்புத்தெரிவித்து வந்த தமிழக அரசு, தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தமிழ்நாட்டிற்கான தனி கல்விக்கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிந்தது. கல்வியாளர்கள், அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளனர். தற்போது அறிக்கைகளை எழுத்து வடிவமாக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கான கருப்பொருள்களையும் வடிவமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்புக்குழுவின் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான முருகேசன் இன்று(ஏப்.13) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறும்போது, "தமிழ்நாடு மாநிலக் கல்விக்குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினரிடம் பெற்றக் கருத்துகளைத் தொகுத்து வருகின்றனர். அந்தப் பணியை முடிப்பதற்கு ஏப்ரல் மாதம் வரையில் தேவைப்படும் என உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். அவர்கள் பிற துறைகளில் இருப்பதால், இந்த அவகாசம் தேவைப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மே மாதம் முழுவதும் பெறப்பட்ட கருத்துகளின் மீது ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர் அந்தக் கருத்துகளை தொகுத்து, செப்டம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். குழுவின் அறிக்கையை அரசிற்கு சமர்ப்பித்த பின்னர், அவர்கள் வரைவு அறிக்கையின் மீது பொதுமக்களின் கருத்துகளை கேட்பார்கள். பிறகு அதில் திருத்தம் தேவை எனக் கருதினால் குழுவின் கருத்தினைக் கேட்பார்கள்.

குழுவின் காலம் மே மாதத்துடன் முடிவடைதால், கூடுதல் கால அவகாசம் கேட்க உள்ளோம். மாநிலக் கல்விக் கொள்கையில் அனைத்து தரப்பு கருத்துகளும் ஆய்வுசெய்யப்பட்டு எடுத்துக் கொள்ளப்படும். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பாலியல் விழிப்புணர்வு கல்வி, வாழ்வியல் கல்வி போன்றவையும் இணைக்கப்படும். தற்போது உள்ள பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பரிந்துரை செய்யப்படும்.

தமிழ்நாட்டிற்கான தனிக் கல்விக்கொள்கை வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படாது. வரும் 2024-25ஆம் கல்வியாண்டில் அமல்படுத்தப்படக்கூடும். நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களும் கல்விக்கொள்கையில் இடம்பெறும்" என்றார்.

இதையும் படிங்க: மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.