ETV Bharat / city

மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு

author img

By

Published : Jul 13, 2022, 1:49 PM IST

மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

Etv Bharaமாநில கல்விக் கொள்கை குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்க முடிவுt
Etv Bhமாநில கல்விக் கொள்கை குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்க முடிவுarat

சென்னை: தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தற்போது இந்த கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு பாதகமான அம்சங்கள் இருப்பதாக திமுக தொடர்ந்து எதிர்த்து வந்தது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டிற்குத் தனியாகக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்க மாநில அளவிலான குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு: அந்தக் குழுவின் தலைவராக முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டார். மேலும், உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், ராம சீனிவாசன், யூனிசெப் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்தினம் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு ஓராண்டு காலக்கெடு வழங்கியது. இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு தலைவருமான முருகேசன் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் நேற்று (ஜூலை 12) மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் உள்ள சவால்கள் குறித்து குழுவினர் தீவிரமாக ஆலோசனை செய்தனர்.

மாநில கல்விக் கொள்கை குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்க முடிவு

எட்டு மண்டலமாகப் பிரித்து கருத்துக் கேட்பு: அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முருகேசன், புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு விதித்து எட்டு மண்டலங்களாகப் பிரித்து தமிழ்நாட்டில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து அறிவிப்பு இரு நாட்களில் முறைப்படி அறிவிக்கப்படும். பொதுமக்கள் மின்னஞ்சல் மூலமும் நேரடியாகவும் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான மின்னஞ்சல் முகவரியும், நேரடி முகவரியும் அறிவிக்க உள்ளோம்.

கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். மேலும் நேரடியாகப் பொதுமக்களிடம் நாங்களும் கருத்துக்களைப் பெற உள்ளோம். புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பது குறித்து கல்வியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

மேலும் பள்ளிக்கல்வித் துறை. உயர்கல்வித் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட கல்வித்துறை உடன் தொடர்புடைய அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் அழைத்து வரும் 26 மற்றும் 27 தேதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த ஆர்டிஐக்கு ஆளுநர் செயலகம் அளித்த அதிர்ச்சி பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.