தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி பயணம்

author img

By

Published : Jan 18, 2023, 12:18 PM IST

Tamil Nadu Governor RN Ravi visited Delhi

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி சென்றுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட உரையில் மாற்றம் செய்யப்பட்டதோடு, சில வார்த்தைகளை தவிர்த்து ஆளுநர் ரவி உரையாற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சட்டப் பேரவையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதனால் ஆவேசமடைந்த ஆளுநர் ரவி கூட்டம் முடிவதற்கு முன் அங்கிருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்த வெளிநடப்பு சர்ச்சையான நிலையில் ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் டி.ஆர். பாலுவுடன் அடங்கிய குழுவினர் ஆளுநர் நடந்து கொண்ட விதம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடும் நேரடியாக கொடுத்தனர்.

இதையடுத்து ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று சில முக்கிய அதிகாரிகளை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று (ஜனவரி 18) மீண்டும் ஒரு நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லி செல்லும் ஆளுநர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.