ETV Bharat / state

நீரிழிவு நோய்க்கு குட் பை..! இதோ பக்க விளைவுகள் இல்லா சித்த மருந்துகள்..

author img

By

Published : Jan 13, 2023, 4:24 PM IST

நீரிழிவு நோய்க்கு குட் பை கொல்லுங்க
நீரிழிவு நோய்க்கு குட் பை கொல்லுங்க

நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை குணப்படுத்த பக்க விளைவுகள் இல்லா சித்த மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.

நீரிழிவு நோய்க்கு குட் பை கொல்லுங்க

சென்னை: நீரிழுவு நோய்.. உலகத்தையே மிரட்டும் நோயாகவும் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோயாகவும் மாறி வருகிறது. நீரிழிவு நோயைக் (சர்க்கரை நோய்) கட்டுப்படுத்த மருத்துவம் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல் உடற்பயிற்சிகளிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது. சித்த மருத்துவத்தில் மேக நோய்களான பிரமேகம், மதுமேகம் எனும் வரிசையில் சர்க்கரை நோயைக் குறிப்பிட்டுள்ளனர்.

சித்த மருத்துவப் புரிதலின்படி சிறுநீர் கழித்த இடத்தில் சிறுநீர் நுரைத்துக் காணப்படுவது மேக நோய்களின் குறி குணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சித்த மருந்துகளை உண்பதால் பல்வேறு பிரச்சனைகள் வரும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த மருந்துகள் அறிவியல் முறைப்படி நிருபணம் செய்யப்படவில்லை எனவும் குறி வந்தனர். இந்த நிலையில் இந்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சித்துறை ஆய்வு செய்து , மதுமேக சூரணம், வெண்தாமரை சூரணம் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாதது என நிருபணம் செய்துள்ளனர்.

நோய் தீர்க்கும் சித்த மருந்துகள்: இது குறித்து இந்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் நடராஜன் கூறும்போது, “உலகம் இன்று வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தொற்றா நோய்கள் என கூறப்படும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் அதிகளவில் வருகிறது. இதற்கான தீர்வைத் தேடி மக்கள் பல இடங்களில் அலைகின்றனர். நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் இதற்கான மருந்துகள் இருக்கின்றன.

சித்த மருத்துவம் பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி, சென்னையில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி உட்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தின் தன்மையையும், அதன் செயல்பாடுகள், பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு: சென்னை ராமசந்திரா மருத்துவக்கல்லூரியின் பேராசிரியரும், இருதயவியல் நிபுணருமான தணிகாசலம் மேற்பார்வையில் 2008 ம் ஆண்டு முதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பல்வேறு விதமான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுதம், இருதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற எல்லா நோய்களும் ஏற்படுவதற்கு காரணம் ரத்தநாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் என்பது தெரிய வருகிறது.

எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு மனிதரையும் தொடர்ச்சியாக கண்காணித்து பார்க்க கூடிய ஆய்வினை 10 ஆண்டுகள் மேற்கொண்டோம். அதில் குறிப்பாக சித்த மருத்துவத்தின் மதுமேக சூ ரணம் ஆய்வாக எடுத்துக் கொள்ளப்பட்டு, சர்க்கரை நோய் இருந்தவர்களுக்கு 10 ஆண்டுகள் கொடுத்து பரிசோதனை செய்த போது அவர்களின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தது. இதே காலத்தில் நவீன மருந்துகளை எடுத்துக் கொண்ட நோயாளிகள் கூடுதலாக 10 மாத்திரைகளை வேறு நோய் தாக்கத்திற்காக எடுத்துக் கொண்டனர். ஆனால் சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டவர்கள் அதே அளவில் மருந்துகளை எடுக்கும் நிலைமை மாறாமல் இருந்தது.

நீரிழிவு நோய் முற்றிய நிலையில் காலில் புண் வருதல் போன்ற எந்த பாதிப்பும் அவர்களுக்கு வரவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிதியை பெற்று ஆராய்ச்சி செய்யப்பட்டு, அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. 10 வருடத்தில் 8080 நபர்களை தொடர்ச்சியாக கண்காணித்தோம். அவர்களில் யாரும் சர்க்கரை நோயாளியாக மாறவில்லை. இதனால் அவர்களுக்கும், அரசிற்கும் நிதிசுமை குறைக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம் 50 ஆண்டுகளாக மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. மக்களின் பார்வை மட்டும் அல்லாமல் , அறிவியல் பார்வையும் அதில் இணைந்துள்ளது. தமிழ்நாடு புத்தாக்க திட்டத்தில், நீாிழிவு நோய்க்கு முன்நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து சர்க்கரை நோயாளியாக மாறாமல் தடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 வட்டார சித்த மருத்துவமனைகளில் 50 நோயாளிகள் தேர்வு செய்து 2500 பேருக்கு மதுமேக சூரணம் கொடுக்கப்பட உள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசு ஆய்வு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தல்: அதேபோல் அதி ரத்த அழுத்தம் என கூறப்படும் உயர் ரத்த அழுத்தத்திற்கும் வெண்தாமரை மருந்தும் சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் ஆய்வுகள் மேற்காெள்ளப்பட்டுள்ளது.மேலும் சித்த மருந்துகள் சாப்பிடும் போது சிறுநீரகம் பாதிக்கப்படும் என கூறுவது போன்ற எல்லா ஆய்வுகளையும் விலங்குகளுக்கு கொடுத்துப் பார்த்து பாதிப்புகள் இல்லாத மருந்துகள் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெண்தாமரை ,மதுமேக சூரணம் ஆகிய 2 மருந்துகளும் அனைத்து நிலையிலும் ஆராய்ச்சியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதி ரத்த அழுத்தம் ரத்தநாளத்தை வலுப்படுத்த கூடியதாக இருக்கிறது. ஹார்ட் அட்டாக் வருவதையும், பக்கவாதம் வருவதையும் வென்தாமரை சூரணம் தடுக்கும். அதனால் மக்கள் பயன் இல்லாமல் அரசு சித்த மருத்துவமனையில் சென்று பெற்று பயன்படுத்தலாம். மேலும் சித்த மருந்துகள் பாதுகாப்பானதாக இருப்பதால், பொது மக்கள் பயமின்றி எடுத்துக் கொள்ளலாம்.

மூலிகை செடிகள்: சித்த மருந்துகளின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் தாதுக்கள் கலந்துச் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மூலிகைச் செடி வளரும் போது வளரும் பகுதியில் உள்ள தாதுக்களை எடுத்துக் கொள்ளத்தான் செய்யும். ஆனால் சித்த மருந்துகளில் குறிப்பிட்ட அளிவிற்கு மேல் தாதுக்கள் இருக்க கூடாது என்ற விதி உள்ளது. அந்த அளவிற்கு கீழ் தான் தயாரித்து அளிக்கப்படுகிறது.

தாதுக்கள் சித்த மருந்துகளில் கலந்து வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது. மேலும் சித்த மருந்துகளில் மெட்டல், மினரல் சேர்க்கும் போது அதனைப் பயன்படுத்தி செய்யப்படும் வழிமுறைகளின் படித்தான் செய்வோம். அதன் பின்னர் மருந்தாக செய்வோம். இரும்பு மருந்து ரத்த அணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு நல்ல மருந்து. இயற்கை மருந்தையும், தாது மருந்துகளையும் சேர்க்கும் முறை சித்தாவில் மட்டுமே இருக்கிறது. சித்த மருத்துவத்திற்கு சென்னையில் 50 ஆண்டுகளாக ஆய்வு மையம் இயங்கி வருகிறது. எனவே சித்த மருந்துகளை தைரியமாக சாப்பிடலாம்.

நீரிழிவு நோய்க்கு அளிக்கப்படும் மதுமேக சூரணத்தில், கடுக்காய்,நெல்லிக்காய், கோரைக்கிழங்கு, சீங்கில்கொடி, நாவல், கீழாநெல்லி போன்ற மூலிகைகள் சேர்க்கப்படுகிறது. இது எந்தவிதமான பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. அடுத்தத் தலைமுறைக்கும் பாதிப்பு வருமா என்பதையும் ஆய்வு செய்துள்ளோம். எனவே மதுமேக சூரணம் பாதுகாப்பான மருந்து தான். நீரிழிவு நோய் உச்சமாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவரின் வாழ்க்கையும் மாற்ற வேண்டும். சித்த மருத்துவரின் ஆலோசனையின் போரில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாஸ்குலர் இன்சுலின் எதிர்ப்பு - ஆண்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.