அடுத்தடுத்து படமாகும் வடிவேலு கேரக்டர் - தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சமா?

author img

By

Published : Sep 24, 2021, 10:31 PM IST

தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சமா?

வைகைப்புயல் வடிவேலுவின் கதாபாத்திரம், வசனம் ஆகியவை படத்தின் தலைப்பாக வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

சென்னை: தமிழ் சினிமாவில் ஏற்கனவே கதைக்கு பஞ்சம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது தலைப்புக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் படம் எடுக்கப்பட்ட பிறகு அதற்கு தலைப்பு வைக்கப்படும். இப்போது தலைப்பை வைத்து விட்டு அதற்கு தகுந்தாற்போல் கதை எழுதப்படுகிறது. பழைய படங்களில் தலைப்பே ஒரு படத்தின் கதையை சொல்லிவிடும். இப்போது கதைக்கும் தலைப்புக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலுவின் கதாபாத்திரம், வசனம் ஆகியவை படத்தின் தலைப்பாக வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நாய் சேகர் தலைப்பை நடிகர் சதீஷ் கைப்பற்றிய நிலையில் இதுவும் தலைப்பாகியுள்ளது. வடிவேலுவின் 'அவனா நீய்யி' 'நான் அப்படியே ஷாக்காய்ட்டேன்' 'கடுப்பேத்துறார் மை லார்ட்' போன்ற வசனங்கள் படங்களின் தலைப்பாகும் எனத் தெரிகிறது. வடிவேலுவின் வசனங்களைத் தொடர்ந்து கதாபாத்திரப் பெயர்களையும் படத்தலைப்பாக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தலைப்புக்கு முக்கிய பங்கு

பல லட்சம் முதல் கோடி ரூபாய் வரை செலவு செய்து எடுக்கப்படும் படங்களின் வெற்றியில் தலைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. படத்தின் தலைப்பை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதென்பது ஒரு படத்தின் தொடக்கநிலை வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

கான்ட்ராக்டர் நேசமணி
கான்ட்ராக்டர் நேசமணி

அந்த வகையில் ஒரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் செலவாவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் தலைப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான வார்த்தையாக இருந்தால், கூடுதல் லாபம். இதனால் நடிகர் வடிவேலு பேசிய வசனங்களை படத்தின் தலைப்புகளாக வைத்து வருகின்றனர்.

கான்ட்ராக்டர் நேசமணி
கான்ட்ராக்டர் நேசமணி

நானும் ரௌடிதான்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ' நானும் ரௌடிதான் ' போன்ற படங்களின் வெற்றிக்கு நடிகர் வடிவேலும் காரணம்.

'திரிஷா இல்லனா நயன்தாரா' 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' 'ஜில் ஜங் ஜக்' போன்ற படங்கள் வடிவேலுவின் பிரபலமான வசனங்களிலிருந்து எடுக்கப்பட்டது.

பிளான் பண்ணி பண்ணனும்

கடந்த நான்கு ஆண்டுகள் நடிகர் வடிவேலு படத்தில் நடிக்காத நிலையிலும் 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா' 'பிளான் பண்ணி பண்ணனும்' ஆகிய அவரது வசனங்களில் படங்கள் வெளியாகின.

நாய் சேகர்
நாய் சேகர்

வடிவேலுவின் வசனம் மட்டுமின்றி அவர் நடித்த கதாபாத்திரமும் படத்திற்கு தலைப்பாக மாறி வருகின்றது. ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் 'காண்ட்ராக்டர் நேசமணி' கதாபாத்திர பெயரில் யோகிபாபு, ஓவியா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (செப்.24) தொடங்கியது.

குரங்கு பொம்மை என்ன விலை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 'pray for nesamani' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. அதுவும் அன்கா புரொடொக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் படமாக உருவாக உள்ளது. வடிவேலுவின் பிரபலமான வசனங்களான 'அவனா நீய்யி' 'குரங்கு பொம்மை என்ன விலை' 'நான் அப்படியே ஷாக்காய்ட்டேன்' 'கடுப்பேத்துறார் மை லார்ட்' 'தங்களுக்கு தெரியாத சட்டமொன்றும் இல்லை' உள்ளிட்ட வசனங்களை பதிவு செய்வதற்கு தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நாய் சேகர்
நாய் சேகர்

லைகா நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் வடிவேலு 'நாய் சேகர்' தலைப்பு தனக்கு கிடைக்காத வருத்தத்தில் உள்ளார். அவரது வசனங்களில் புதிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்க தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

நாய் சேகர்
நாய் சேகர்

தலைப்புக்கு பஞ்சமா?

ஏற்கனவே விலங்குகளின் பெயரை படத்தின் தலைப்பாக வைத்து வந்த இயக்குநர்கள் மத்தியில் இதுவும் தொற்றிக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் திரைத்துறையில் தலைப்புக்கு பஞ்சமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: “பிளான் பண்ணி பண்ணனும்” - வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.