தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை: கடை உரிமையாளர் கைது

author img

By

Published : Oct 11, 2021, 12:34 PM IST

arrest

சென்னை: கொடுங்கையூர் அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

சென்னை கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்கேபி நகர் ஆகிய பகுதிகளில் சிலர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விநியோகம் செய்வதாக கொடுங்கையூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலையடுத்து கொடுங்கையூர் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கொடுங்கையூர் டீச்சர் காலணி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் வழக்கத்திற்கு மாறாக நிகழ்வுகள் நடப்பதை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான குட்கா பொருள்கள் பதுக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக கடை உரிமையாளரான முகமது இஷா (43) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Gutka
கைதான முகமது இஷா

மேலும் அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த பல்வேறு வகையான குட்கா பொருள்கள், குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் முகமது இஷா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குட்கா விற்பனை தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெங்களூரு டூ சென்னை: கொரியரில் வந்த 1 டன் எடையுள்ள குட்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.