ETV Bharat / state

மிக்ஜாம் புயல் : புயல் வெள்ளத்தால் சென்னையில் 17 பேர் பலி! அதிர்ச்சித் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 10:47 PM IST

Etv Bharat
Etv Bharat

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் இதுவரை 17 பேர்கள் உயிரிழந்துள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது

சென்னை: மிக்ஜாம் புயலின் கோர தாண்டவத்தால், சென்னை முழுவதும் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இப்புயலின் காரணமாக, சென்னை மாநகரில் பெய்த கனமழையின் நடுவே, பலரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று (டிச. 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பட்டினப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மாநகர போக்குவரத்து கழக டிப்போ அருகில் இறந்து கிடந்த பெயர், விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபரின் உடல் கைப்பற்றப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டியன் நகர், செல்வ விநாயகர் கோயில் தெருவில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன்(70) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பரத் (வயது 53) என்பவர் நொச்சிக்குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிழந்தார்.

சூளைமேடு மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றி வந்த செல்வம்(50) என்பவர் பள்ளி வளாகத்திற்குள் இருந்த மழைநீரில் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

04.12.2023 அன்று, பிராட்வே BRN கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு (வயது 35) என்பவர் மீது பிரகாசம் சாலை & சாலை விநாயகர் கோயில் சந்திப்பு அருகே மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில், அவருக்கு தலையில் காயத்துடன் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகரில் முருகன் (வயது 35) என்பவர் மீது மரம் விழுந்ததால் உயிரிழந்தார். கோட்டூர்புரம் மாநகராட்சி பள்ளி நிவாரண மையத்தில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மிராஜுல் இஸ்லாம்(19) என்பவர் இன்று (டிச.5) வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தாமோதரன் (வயது 40) என்பவர் தனது வீட்டில் தேங்கியிருந்த மழைநீரில் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்க காணப்பட்டார்.

5.12.2023 அன்று 0700 மணிக்கு உடல் நலமின்றி படுக்கையிலிருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த பெருமாள் (வயது 64) என்பவர், அவரது வீட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

5.12.2023 அன்று முற்பகல், தலைமைச் செயலக குடியிருப்பு காவல் எல்லைக்குட்பட்ட அஸ்பிரின் கார்டன் அருகே தேங்கிய மழைநீரில் K-7 ICF காவல் நிலைய தலைமைக் காவலர் ருக்மாங்கதன் (48 வயது 2002 பேட்ச்) என்பவர் இறந்து கிடந்தார். போலீசார் சம்பவிடத்திற்குச் சென்று. அவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர், R-4 பாண்டி பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜாபாதர் தெருவில் உள்ள RSP டீ கடை அருகில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக இன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் போக்குவரத்து ஆய்வாளர் சாமிக்கண்ணு (85) என்பவர் அவரது வீட்டில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாபு(53) என்பவர். அவரது வீட்டில் தனியாக இருந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

வைத்தியநாதன் மேம்பாலம் கீழுள்ள பிளாட்பாரம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல் கைப்பற்றப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோன் ஸ்கொயர் சாலை ஆவின் பூத் அருகில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 50) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடல், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Koovam River: கரை புரண்டு ஓடும் தண்ணீர்..! கூவத்தைச் சுத்தம் செய்த மழை நீர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.