சென்னை அயனாவரம் கே.கே நகர் 10ஆவது தெருவில் வசித்து வருபவர் நிர்மலா (35). பெரியமேடு பகுதியில் தோல் கம்பெனியில் வேலைசெய்து வருகிறார். நிர்மலாவின் கணவர் ராஜ்குமார் கடந்தாண்டு உயிரிழந்துள்ளார். நிர்மலாவுக்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த சரண் ராஜ் (16) மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக்(15) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
தற்போது கரோனா விடுமுறைக்கு பின்னர் கடந்த 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், சரண்ராஜ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் பள்ளிக்கு செல்லுமாறு தாய் நிர்மலா பலமுறை சரண்ராஜைக் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (பிப்.15) வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சரண்ராஜ் தற்கொலை செய்துகொண்டார்.
இதைக் கண்ட தம்பி அபிஷேக் அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சரண்ராஜின் உடலைமீட்டு உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் கோவர்த்தன மலை கற்கள் விற்பனை : சென்னை இளைஞரை கைது செய்த உ.பி. போலீசார்