ETV Bharat / state

உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் - ஒருவர் கைது

author img

By

Published : Dec 7, 2020, 7:17 PM IST

சென்னை: துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி கொண்டுவரப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கான மீட்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் பணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று துபாயிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சோதனை செய்தபோது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சேர்ந்த ஜோதி(38) என்ற பெண் பயணியின் செயல் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சோதனை செய்தபோது கருப்பு டேப் சுத்தப்பட்ட இரண்டு தங்க பசை பாக்கெட்டுகள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்துயிருந்தது தெரியவந்தது. 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய 295 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அலுவலர்கள், அப்பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோடிக்கணக்கில் தங்கம் கடத்தல் - ஆறு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.