ETV Bharat / state

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு - மீண்டும் தூசிதட்டிய உயர் நீதிமன்றம்

author img

By

Published : Nov 21, 2022, 7:08 PM IST

repatriate
repatriate

பள்ளி மாணவனின் தாய்க்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு, அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பபெறக்கோரி, சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கூடாது என வாதிடப்பட்டது.

காவல் துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர் தரப்பு வாதத்தைக் கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால், அந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென வாதிட்டார்.

இதனையடுத்து, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப்பெற்ற நீதிபதி, வழக்கை ரத்து செய்யக்கோரிய சிவசங்கர் பாபாவின் மனுவை இறுதி விசாரணைக்காக நவம்பர் 29ஆம் தேதி பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்கலாமா? - அரசு பதிலளிக்க ஆணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.