ETV Bharat / state

தாம்பரத்தில் ரூ. 250 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

author img

By

Published : Oct 21, 2022, 10:48 PM IST

தாம்பரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரூ. 250 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.

அரசு நிலம் மீட்பு
அரசு நிலம் மீட்பு

சென்னை: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையும் காந்தி சாலையும் சந்திக்கும் மையப்பகுதியில் வசிப்பவர் சந்திரன். இவர் 2.37 ஏக்கர் கொண்ட சுமார் 250 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அந்த இடத்தில் அவர் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், வட்டாட்சியர் கவிதா தலைமையில் போலீசார் சந்திரன் வசிக்கும் இடத்திற்கு இன்று (அக். 21) வந்தனர்.

இது அரசுக்கு சொந்தமான இடம் என்று தீர்ப்பு வந்துள்ளதாக சந்திரனிடம் போலீசார் கூறினர்.

நீதிமன்ற உத்தரவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ஒட்டிவிட்டு சந்திரன் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

மேலும் மீட்கப்பட்ட இடத்தில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் விரைவில் வரவுள்ளதாக வருவாய் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையும் காந்தி சாலையும் சந்திக்கும் மையப்பகுதியில் வசிப்பவர் சந்திரன். இவர் 2.37 ஏக்கர் கொண்ட சுமார் 250 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அந்த இடத்தில் அவர் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், வட்டாட்சியர் கவிதா தலைமையில் போலீசார் சந்திரன் வசிக்கும் இடத்திற்கு இன்று (அக். 21) வந்தனர்.

இது அரசுக்கு சொந்தமான இடம் என்று தீர்ப்பு வந்துள்ளதாக சந்திரனிடம் போலீசார் கூறினர்.

நீதிமன்ற உத்தரவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ஒட்டிவிட்டு சந்திரன் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

மேலும் மீட்கப்பட்ட இடத்தில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் விரைவில் வரவுள்ளதாக வருவாய் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.