ETV Bharat / state

தமிழ்நாட்டில் தேர்தல்: பொது விடுமுறை அறிவிப்பு!

author img

By

Published : Oct 5, 2021, 12:26 PM IST

Updated : Oct 5, 2021, 12:44 PM IST

9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை
9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களில் பரப்புரை அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. தேர்தலுக்குத் தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் அக்டோபர் 6ஆம் தேதி வரை திறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Last Updated :Oct 5, 2021, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.