ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா பாதிப்பு: நேற்றைவிட 4 பேருக்கு பாதிப்பு அதிகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 9:31 PM IST

Updated : Dec 17, 2023, 10:45 PM IST

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா பாதிப்பு

Corona Virus: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் எண்ணிக்கை விவரம் குறித்து பொது சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 15ந் தேதி 8 என ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு, 16ந் தேதி இரட்டை இலக்கத்திற்கு மாறியது. இதனையடுத்து பொதுச் சுகாதாரத்துறை இன்று(டிச.17) வெளியிட்டுள்ள கரோனா தொற்று குறித்த அறிவிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உலகையே உலுக்கிய கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து சிங்கப்பூர், கேரளாவில் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பின் போது அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதோடு, முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை டிசம்பர் 17ந் தேதி வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த விபரங்களில், தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் 319 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரையில், 6 கோடி 97லட்சத்து 68ஆயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் கரோனா குறித்து அரசின் விதிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்" என்று அந்த அறிவிப்பில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, புதிதாகச் சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் தலா 5பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 2பேரும் என 20 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் குற்றங்கள் குறைய வேண்டி காவடி எடுத்த காவல்துறையினர்..!

Last Updated :Dec 17, 2023, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.